இலண்டன் தமிழ் வானொலி என்றோர் இனிய காற்றலை…

அன்பு உறவுகளே,

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவோடு உங்கள் கணிணித்திரைகளை அடைவதில் மிக்க மகிழ்ச்சி….

பதிவில் நுழைவதற்கு முன் ஒரு நிமிடம்.. இந்த பதிவை வாசிக்கத்துவங்கும் முன் “இலண்டன் தமிழ் வானொலி” யை ஒரு முறை கேட்டு விடுங்களேன்.

முன்னால் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் ” Listen to live radio” என்ற இணைப்பு கிடைக்கும். அதில் சொடுக்கினால், உங்கள் கணிணியில் கேட்கும் வகையில் ‘TVU Player” என்ற “ஒலி, ஒளி செயலி்” கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள “செயல்படு” என்ற (Play) இடத்தில் சொடுக்கினால் உங்கள் கணிணி, காற்றலைகளை உங்கள் காதுகளில் ஒலிக்கச்செய்யும். இது தொடர்பாக உஙளுக்குள் தோன்றும் ஐயஙகளை கீழ்கண்ட சுட்டியில் சென்று விளங்கிக்கொள்ளுங்கள். tvu player faq. இலண்டன் தமிழ் வானொலி: http://firstaudio.info

சரி..

இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்…

  • நீங்கள் தமிழரா? அல்லது தமிழ்ப்பேசத்தெரிந்தவரா?
  • வானோலி கேட்கும் பழக்கம் உள்ளவரா?
  • எல்லா அலைவரிசைகளிலும், எல்லா நேரங்களிலும் cinema பாடலாக இருக்கிறதே என்று புலம்புபவரா?
  • வாழ்வியல் நிகழ்வுகளையும் உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஊடகத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
  • அரசியலை வெறுக்கிறீர்களா?
  • ஆமாம் sir ஆமாம்.. இப்ப என்ன செய்ய சொல்றீங்கன்னு நீங்க கேட்டால் அதற்கு என் பதில்… ஒரு முறை இலண்டன் தமிழ் வானொலி கேட்டுப்பாருங்களேன்..

    இங்கே திரைப்பாடல்கள் உண்டு, ஆனால் அதை நீங்கள் வேறு எந்த வானொலியிலும் கேட்க முடியாது அல்லது அரிதாக கேட்க கூடிய பாடல்களாக இருக்கும்.

    புலம்பெயர் தேசத்தில் நீங்கள் சந்தித்த ஒரு சிக்கலை பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கும் இந்த காற்றலையில் இடம் உண்டு.

    அடுத்த தலைமுறை தமிழர்களையும் அவர்களின் தமிழ் மொழி ஆளுமைத்திறனையும் மனதிற்கொண்டு இந்த காற்றலை துவங்கப்பட்டதாக இதன் தலைவர் திரு. நடா மோகன் நமக்கு அறியத்தருகிறார்.

    ” ஓடி விளையாடு பாப்பா ” என்ற நிகழ்ச்சியை இதற்கு காட்டாகக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு தமிழனும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலாம். ஓடி விளையாடு பாப்பாவில், ஒவ்வொரு குழந்தையின் குரலை விட அவரின் எழுத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரலை பதிவு செய்து அனுப்பும் அதே வேளை அதனை எழுத்து வடிவிலும் எழுதி அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. இது உலக ஊடக வரலாற்றில் நான் எங்கும் காணாத தமிழை வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகக்கருதுகிறேன்.

    இந்த வானொலியை காற்றலை என்று அழைக்கவே இதன் தலைவர் விரும்புகிறார். காரணம், வானொலிக்கான எல்லா விதிமுறைகளையும் மீறி தனக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக்கொண்டுள்ளது எனில் அது மிகையல்ல!

    மிக முக்கியமான செய்தி இந்த ” காற்றலை” எந்த ” இயக்கத்தை”யும் ஆதரிக்காததுதான். புலம்பெயர் தமிழர்களின் வானொலி என்றாலே முதலில் நம் கவனத்தில் வருவது இந்த ” இயக்க” சிக்கல்தான். அந்த சிக்கலையும் இந்த காற்றலையில் எளிதில் தவிர்த்துவிட முடிகிறது. ( இது பற்றி விளக்கமாக மற்றொரு பதிவை விரைவில் வெளியிடுகிறேன்)

    உங்கள் படைப்புகளை இந்த காற்றலையில் வெளியாக்கம் செய்யுங்களேன். அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல விரும்பும் ஒவ்வொரு பொறுப்புள்ள பெற்றோரும் தங்கள் குழந்தைகளை, அவர்களின் படைப்புகளை, மொழி ஆளுமையை இந்த காற்றலையின் மூலம் வெளியிடலாமே.. இறுதியாக, நீங்களும் இந்த காற்றலையில் கலக்க விருப்பமா?

    இதோ தொடர்பு வழிகள்..

  • தொலைபேசி எண்: +44 208 5869636
  • skype id: londontamilradio
  • தொலைநகல் (fax): +44 208 4711985
  • மின்னஞ்சல் (Email): info@firstaudio.info
  • ஆனால் நாமெல்லாம் தமிழர்களாயிற்றே.. தானும் படுக்க மாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம்..

    இப்போ என்ன செய்யப்போகிறோம்?

    என்றும் மாறா அன்போடு தமிழை விரும்பும்,

    தள்ளிப் படுத்துக்கொண்ட ஒரு தமிழன்.

    மலர் பிறந்தநாள்…

    இன்றலர்ந்த என் மலரே

    மல்லிகையின் மென்மலரே

    சொல்லாமல் என்நெஞ்சில்

    தேன் சொரிந்த ஜெயமலரே..

    நீ பிறந்த இந்நாள் தான்

    என் வாழ்வின் பொன்னாளா..

    சொல்லாத வாழ்த்தெல்லாம்

    சொல்கின்றேன் இந்நாளில்..

    இல்லாத இன்பமெல்லாம்

    பொங்கிவரும் நன்னாளில்

    வளம் பெருக புகழ் பெருக

    இன்றுபோல் என்றும்

    என் தோழியாய்

    பல்லாண்டு வாழ வாழ்த்தும்..

    அன்பு..

    உதயா…உதயா..உதயா..

    baby11

    இராகவிக்கு பிறந்தநாள்..

    சுவிஸ் நாட்டில் இன்று பிறந்தநாள் காணும் என் இனிய செல்லக்குட்டி இராகவி ருத்ரேஷ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    வாழ்த்தும் நெஞ்சம்,
    உடையார் மாமா.

    தமிழ் என்றொரு நகைச்சுவைத்தமிழன்..

    அன்பு உறவுகளே!

    இது ஒரு இரங்கற் பா.. எம் தமிழுக்கு..

    tamil

    tamil

    இதுநாள்வரை புலம் பெயர் தமிழர்களின் வாழ்விலே மறக்கமுடியாத ஒரு நகைச்சுவைத்தென்றலாக, இலண்டன் தமிழ் வானொலி ஊடாக, வீசிக்கொண்டிருந்த தமிழ் என்கிற நகைச்சுவை மன்னன் எதிர்பாராத தருணத்தில் எம்மையெல்லாம் மண்ணுலகில் விட்டுவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். ஒரு கவிஞனாக, பேச்சாளராக, நகைச்சுவை மழை பொழியும் மேகமாக அதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக எம்மையெல்லாம் ஆட்கொண்ட தமிழே,

    ஏன் உனக்கு இத்தனை அவசரம்.

    சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க மட்டுமல்ல உனக்கு

    அழ வைக்கவும் தெரியும் எனக்காட்டவா??

    இரண்டு நாளாக எம் கலையகத்தின் தொலைபேசிகள் எல்லாம்

    எத்தனை அழுதன தெரியுமா??

    இப்போது மகிழ்ச்சியா…உனக்கு?

    கல்நெஞ்சக்காரனையா நீ..

    காணும் விழிகளெல்லாம் கண்ணீரால் நனைந்த பின்னும்…

    இன்னும் கரையலயோ உன் நெஞ்சம்..

    மௌனம் கலைத்து எழுந்து வர மாட்டாயா??

    மீண்டும் வந்தெம்மை சிரிக்க வைக்க மாட்டாயா??

    நீ வரமாட்டாய்…

    நீ பெரும் தலைவனுமில்லை..

    அரசியல் பிழைத்த அரசியல்வாதியுமில்லை..

    இரசிகன் புடை சூழ வலம் வரும் நடிகனுமில்லை..

    இவர்களையெல்லாம் விட எத்தனையோ தமிழர்களின் இல்லத்திலே..

    இல்லை இல்லை..

    உள்ளத்திலே குடிகொண்ட இன்பத்தமிழன் நீ..

    இந்த மண்ணை விட்டு மறைந்தாலும்

    எம் மனதை விட்டு மறையாத மனிதன் நீ..

    அணையா விளக்காய் எம்முள் நீ..

    அமுதத்தமிழாய் என்றும் நீ..

    இன்று சிந்திய கண்ணீர் துளிகள்

    எல்லாம் நீ சிந்திய நகைச்சுவைத் துளிகள்..

    இனி வரும் வியாழனெல்லாம்

    எங்கே போய்த்தேடுவேன் உன்னை..

    ஞாயிறே! உனை எதிர்க்க இனி எமக்கு குளிரில்லை..

    திங்களே! உனைப்பார்க்க எனக்குத் திடமில்லை..

    வெள்ளியே! உன் சிமிட்டல்கள் எனை மகிழ்விக்காது..

    வியாழனே! நீ வராதே.. உனை மகிழ்விக்க எம்மிடம் தமிழில்லை..

    நீ வராதே..நீ வராதே…

    இலண்டன் தமிழ் வானொலி

    இனி

    இலண்டன் “தமிழ்” வானொலியாக வலம் வரும்.

    என்றும் மீளாத்துயரில்..

    அன்புத்தம்பி..

    இராசேந்திர உடையார்..

    தமிழில் TOEFL இப்படித்தான் இருக்குமோ?..

    இன்று காலை எனக்கு நண்பர் கோம்பை சரவணன் அனுப்பிய மின்னஞ்சல் மிகவும் சுவையாக இருந்தது!  நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம், எல்லோரும் தயார்தானே, இந்த TOTML( Test of Tamil as a Madras Language) தேர்வின் விடைகளை பின்னூட்டத்தில் இடவும்.

    தயாரா?  ”ஜூட்”

    1) “குஜிலி” யுடன் நீங்கள் செய்வது?

    அ) குஜால்ஸ் ஆ) கில்மா இ) கில்பான்ஸ் ஈ) கலீஜ்

    2) ”ஜூஜுபி” என்றால் என்ன?

    அ) ஒரு இனிப்பு பலகாரம் ஆ) மிகவும் சுலபமானது இ) மிகவும் கடினமானது ஈ) ஒரு வகை “அல்வா”

    3) “அல்வா” என்றால் என்ன?

    அ) திருநெல்வேலியில் காணப்படுவது ஆ) ஒரு பெண் தோழி வேறொருவரை மணந்துகொள்ளும் போது தன் ஆண் நண்பருக்கு கொடுப்பது இ) ஒரு வகையான லட்டு. ஈ) ஒரு தாவரம்.

    4) ஒரு நண்பரை மரியாதையாக விளிக்கும் (அழைக்கும்) முறை!

    அ) மச்சி ஆ) சார் இ) அவர் பெயரைச் சொல்லி ஈ) ஐயா.

    5) “ஃப்ரூட்டி” என்றால் என்ன?

    அ) நிறைய படித்தவர் ஆ) விளையாட்டு வீரர் இ) பேராசிரியர் ஈ) ஒரு வகை குளிர் பானம்.

    6) யாரேனும் “நம்பிட்டேன்” என்று சொன்னால் அதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்வது என்ன?

    அ) நான் உன்னை நம்பவில்லை ஆ) நிச்சயமாக, நான்  உன்னை நம்புகிறேன். இ) லூசாப்பா நீ? ஈ) எனக்கு பஸ்சுக்கு நேரமாச்சு.

    7) பீட்டர் என்பது யார்? அல்லது என்ன?

    அ) ஒரு சுற்றுலா பயணி  ஆ) தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேசுபவர். இ) தமிழில் மட்டுமே பேசுபவர் ஈ) உங்கள் ஆசிரியர்.  

     8) ” கும்பலோடு கோவிந்தா” என்ற பதம் பின்வரும் எந்த நிகழ்வோடு தொடர்புடையது?

    அ) நீங்கள் கும்பலாக  திருப்பதி செல்வது ஆ) கும்பலாக “பலான” படம் பார்க்கும் போது கையும் களவுமாக பிடிபடுவது இ) குழுவாக சேர்ந்து படிப்பது. ஈ) குழுவோடு சேர்ந்து ஒரு இந்தி நடிகரை பார்க்கச் செல்வது.

    9) “ரப்சர்” என்றால் என்ன?

    அ) கடி பார்ட்டி ஆ) திராபை இ) பிரச்சனை ஈ) பயங்கரமான பார்ட்டி

    10) ஒருவர் ஒரு பெண்ணைப்பார்த்து ” சரியான கட்டை” என்று கூறினால் அதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்வது ?

    அ) அவள் ஒரு அறிவாளி ஆ) அவள் ஒல்லியான பெண் இ) எல்லோர் கண்களையும் கவரும் பெண்  ஈ) கட்டைச்செருப்பு அணிந்த பெண்.

    பதில்களை பின்னூட்டமிடுங்கள்… மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளிய்டப்படும்.

    நல்ல “தமிழ் மகனை” அடையாளம் காண்போம்.

    இராமர் பாலம் (or) Rameshwaram, a holy place to visit!.

    adamsb11.jpg

    Recently I have visited the most discussed ramesehwaram and Ram’s bridge( adams bridge, sethu samudhram) , apart from politics I love the scenic beauty that it posses. To have a look at some of  its religious beauty just click the link below.

    Rameshwaram Photos.

    Rameshwaram is an island situated in the gulf of manner at the very tip of the Indian peninsula. A very important pilgrim centre of the Indians. Rameshwaram is the place from where Lord Rama ( really I dont know), built a bridge across the sea to rescue his consort Sita, from her abductor, Ravana. This is also the place where Rama worshipped Lord Shiva to cleanse away the sin of killing Ravana. Both the Vaishnavites and Shaivites (not the humanites)visit this pilgrimage which is known as the Varanasi the south.

    Mythology 

    According to the Hindu “mythology”! i.e. the story of Ramayana? Lord Rama performed thanksgiving rituals to Lord Siva after the battle at Sri Lanka and his triumph over the demon king “Ravana” (a real brahmin!” note this point.). Owing to this Rameshwaram attracts Vaishnavites (worshippers of Lord Vishnu) and Saivites (worshippers of Lord Shiva) alike. Sri Lanka is at a distance of 24 kilometers from Rameshwaram. In fact the entire area of Rameshwaram is associated with various incidents from the Ramayana. Rameshwaram happens to one of the most visited pilgrim sites in India.

    Dhanushkodi (History!)
    Dhanushkodi named after Rama’s bow, is at the eastern end of the island at a distance of 8 kms from Rameshwaram. The boulders around the sea between Srilanka and this place known as Adam’s bridge, are believed to be used by Hanuman to reach across Srilanka. Dhhanushkodi was completely destroyed by the cyclones of 1964. Kothandaramaswamy temple is the only salvage of the cyclone. Idols of Rama, Sita, Lakshmana, Hanuman and Vibhishana (brother of Ravana), surrendered to Rama, here.

    Politics  (Adam’s Bridge)

    “The Chief Minister of Tamilnadu said the Sethusamudram project was meant for the development of Tamil Nadu, especially the backward southern districts. Once completed, shipping distances would be cut short, bringing down the travel costs. Trade and commerce would flourish in the region as it did in the past. The State people have been dreaming of completion of the project for more than a century. Intellectuals and economists too were waiting for the project’s completion. The DMK government did not want the intention of the opponents to succeed, he said”.

    But all(esp. BJP)  North Indian politicians are against this comment and the project itself! what impress me was a comment posted by Saccha hindustani on NDTV   “The politicians in the north, they don’t want South to grow. If Sethu Samudram project is completed, then Tamil Nadu & its adjoining states growth rate will be high. Some how the so called politicians & so called hindu organizations wants to stop digging Sethu Smudram. So they made a story that of Ram Bridge. They area already jealous with the booming of IT industries in Southern India.”

    Almost looks wellsaid one. let the rama, seetha and mythology apart, we can give our voice to help this project to uplift Southern Coastel region people, as they are the most benefitted alongside with India.

    After successful completion of this project , global path to reach tamilnadu will be laid.

    for those still believe in rama’s skills, you have a nice site to visit : http://www.rootsweb.com/~lkawgw/adamsbridge.html 

    ok, bye for now

    please send me your comments

    என் இனிய நண்பர்கள்

    என் நண்பர்கள் எல்லோரும் இனியவர்களே! அவர்களில் சிலர் இங்கே…

    யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்… உடனே தெரிவிக்கவும்…

    முதலில்..

    என் மனைவி காயத்திரி..

    மண்ணோடு கலந்துவிட்டபோதும்                               மனதோடு இணைந்துவிட்ட என் சகி.

    மணி(கு)கண்டன், ரமேஷ், முட்டி ஆறுமுகம், குண்டு ஆறுமுகம், கொத்து சுந்தர், வீரணண், சப்பை சிவா.

    கொத்தனார் கார்த்தி, சோமன், கருமலை, கோழிப்பண்ணை முருகன், கார்த்தி.

    தெருவில் துவங்கி                                                                                                    இதுவரைக்கும் என்னோடு இணைந்திருக்கும்                                                                                                                       எங்க ஊர் நண்பர்கள்.

    கண்ணன்(ஏர்போர்ட்), சரவணன், தயானந்த், இளங்கோ. 

    மழை கொட்டும் போதும், அனல் கக்கும் போதும், கல்லூரி அணி தொடங்கி 

    முதல் டிவிசன் லீக் வரைக்கும் மண்னோடும், என் மனசோடும்  மட்டை பிடித்தாடிய

    என் இனிய அணித்தோழமைகள்.   

    ராசாங்கம் (எ) இளவேந்தன்,  செந்தில், மகேந்திரன்(மாப்ள), மணிமாறன்(கூளையன்), நடராசன் (நட்டு),

    இளமறிவியல் தாவரவியல் பட்டத்திற்க்கு நூலாக எனை வழி மொழிந்தவர்கள், கல்லூரி காலத்தை கனா கானும் காலங்களாக மாற்றியதில் பெறும் பங்கு கொண்டவர்கள்.

    காஜா, நாகேந்திரன், முருகன், இராஜி, குண்டு விஜி, கருணைச்செல்வி, ரவி(குரவி), ரவி(துறவி)

    மூதறிவியல் பட்டப்படிப்பில் இரண்டாண்டு காலத்தை இரு நொடியாய்க் கழிக்க உதவிய பசுமை நிறைந்த நட்’பூ’க்கள்! இவர்களைப்பற்றி இன்னும் விரிவாய் வேறோறு பக்கத்தில்…..

    சஞ்சய், மனோஜ், வெங்கட், அழகரசு(கலங்கல்),கண்ணன்.

    அஜய், அனு, அனுராதா, லதா, டேவிட், சரவணன், சுமதி

    மதிஷ், பிரகாஷ், கண்ணன் சந்திரசேகர வாரியர்,  சுமதி, க்ரேஸ் தபிதா,  சந்தன் பரத்வால்,.

    கோது (கோதண்டம்), பாலா, செல்வா, அருட்செல்வன், மாத்யூஸ், ஜான்

    கெளரி, சஞ்சய், அகஸ்டின்.

    தமீம், ஹேசில் ஜார்ஜ்.

    சரவணன், செளந்தர்ராஜன், நாரயணன், கல்யான், தனா, சசிரேகா, கோபி.

    சூரிய கலா, கன்யா.

    பத்மா, விக்னேஷ், சுதா, யோகா, ஆனந்தகிருஷ்ணன், ரெங்கராஜ், அண்ணாமலை, இந்தர், சந்தோஷ், கங்கா, விஜி, சிராஜ், ரம்யா, கேசவன், ப்ரியா, மீனாக்ஷி.

    அலமேலு மங்கை (எ) ரம்யா, வேணி (எ) கிருஷ்ண ப்ரஹன்யா.

    ஜெயகுமாரி.

    மஹாலக்ஷ்மி.

    சங்கீதா செரியன், லக்ஸி யூர்ஜின், நித்யா, நாகராஜ், ஷ்யாம், ராஜேந்திரன், ஹாட்வின், சசிகலா.

    பாலாஜி, சசி.

    டேனியல், சந்தோஷ், அபி, அனிதா, ஷன்முக பிரியா, பவிதா, சதீஷ்வர், அருட்செல்வன்,சரன்யா, சுகன்யா, மாலினி, ரெஜிதா, ஜமில், லவ்ஸ்.

    விஜி, சூரியா, விமல், தினேஷ், பழனி, யுவராஜ், ஜெயமுருகன், அருண், திவ்யா, ஸ்வேதா..

    சசிகுமார் பெருமாள்.

    இப்படி இந்தப் பட்டியல் காவிரி பிரச்சனை போல் தீராது செல்லும்…

    இனி ஒரு தோழமை கிடைத்தால் கட்டாயம் பதிவேன்…….

    உங்கள் அனைவருக்கும் என் நன்றி…..

    அன்புடன்,

    இராசேந்திர உடையார்.

    தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தலைசிறந்த பத்து வசனங்கள்…

    தமிழ் திரைப்படம் பேசத்தொடங்கி 50 ஆண்டுகளுகும் மேலாகிவிட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தலைசிறந்த 10 வசனங்களை வெளியிட்டு உள்ளது.. அதன்படி முதல் பத்து இடங்களை பிடித்த வசனங்கள் கீழிருந்து மேலாக…

    10) மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி… பி.எஸ்.வீரப்பா…. மஹாதேவி

    9) சபாஷ் சரியான போட்டி…. பி.எஸ்.வீரப்பா…. வஞ்சிக்கோட்டை வாலிபன்.

     8) நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!… ஏ.பி.நாகராஜன்…திருவிளையாடல்.

    7) நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு…சிவாஜி கணேசன்… வியட்நாம் வீடு.

    6) பத்தவச்சுட்டியே பரட்டை…. கவுண்டமணி…16 வயதினிலே.

    5) நீங்க நல்லவரா கெட்டவரா?… குழந்தை… நாயகன்.

    4) ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா நாய் மட்டும் வளக்கலை! அதுக்கு பதிலா என்னயதான வளத்துச்சு!…. கமலஹாசன்….. 16 வயதினிலே.

    3) மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை… விஜயகாந்த்… ரமணா.

    2) மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு… வடிவேலு… சந்திரமுகி..

    முதல் இடத்தில் உள்ள வசனம் என்ன என்று கண்டுபிடித்து எனக்கு அனுப்புங்க பார்க்கலாம்… 

    கவிதை

    கவிதை

    கவிஞரே, உம்மை கவர்ந்த கவிதை ஒன்று சொல்லுங்களேன்…..

    காதலி கேட்டாள் ஏக்கத்துடன்..

    கவிஞன் சொன்னான் காதலுடன்,

    கார்கால இரவு

    கவின் கொஞ்சும் நிலவு

    கடலலை ஒலியில்

    கடற்கரை வெளியில்

    மணலில் கோலமிட்டு மடியில் தவழ்கிறது ,

    என் மனம் கவந்த கவிதை! 

    காத்திருக்கையில்….

    காத்திருக்கையில்…

    உன் ஆடைகள் யாவும் எனக்கு அத்துப்படி!
    ஆயினும் உனக்காக கோவிலில் காத்திருக்கையில்
    காணும் எல்லா உடைகளிலும்
    உனைப் பொருத்திப் பார்த்து
    ஏமாந்து போகிறேன்.
    கண நேரம் கண நேரம் என
    மணி நேரம் போன பின்னும்
    என் மனம் சொல்கிறது
    அதோ அங்கே தெரியும்
    பர்தாவுக்குள் ஒருவேளை நீயா?