காத்திருக்கையில்….

காத்திருக்கையில்…
உன் ஆடைகள் யாவும் எனக்கு அத்துப்படி!
ஆயினும் உனக்காக கோவிலில் காத்திருக்கையில்
காணும் எல்லா உடைகளிலும்
உனைப் பொருத்திப் பார்த்து
ஏமாந்து போகிறேன்.
கண நேரம் கண நேரம் என
மணி நேரம் போன பின்னும்
என் மனம் சொல்கிறது
அதோ அங்கே தெரியும்
பர்தாவுக்குள் ஒருவேளை நீயா?

வணக்கம்..

தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு என் வணக்கம்….
இதுவே வலையில் என் முதல் பதிவு. வலைதள நன்பர்களே, என் முயற்சியில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதைப்பொருத்து, என் பதிவுகளை வாசிக்குமாறு அன்போடு விழைகிறேன்.
நன்றியோடு,
இராசேந்திர உடையார்.