கவிதை
கவிஞரே, உம்மை கவர்ந்த கவிதை ஒன்று சொல்லுங்களேன்…..
காதலி கேட்டாள் ஏக்கத்துடன்..
கவிஞன் சொன்னான் காதலுடன்,
கார்கால இரவு
கவின் கொஞ்சும் நிலவு
கடலலை ஒலியில்
கடற்கரை வெளியில்
மணலில் கோலமிட்டு மடியில் தவழ்கிறது ,
என் மனம் கவந்த கவிதை!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பகுக்கப்படாதது | குறிச்சொற்கள்: கவிதைகள்

